உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது

Published On 2023-04-11 14:56 IST   |   Update On 2023-04-11 14:56:00 IST
  • ரோந்து பணியில் சிக்கினர்
  • போலீசார் விசாரணை

குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று அக்கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா(43), சதாம்(26), அவரது தம்பி காதர்பாஷா(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது

செய்தனர்.

மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 60 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து கஞ்சா விற்பனையில் தொடர் புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Tags:    

Similar News