என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா விற்ற அண்ணன் தம்பி"
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று அக்கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா(43), சதாம்(26), அவரது தம்பி காதர்பாஷா(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது
செய்தனர்.
மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 60 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து கஞ்சா விற்பனையில் தொடர் புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.






