என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று அக்கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா(43), சதாம்(26), அவரது தம்பி காதர்பாஷா(19) ஆகிய 3 பேரை போலீசார் கைது

    செய்தனர்.

    மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 60 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து கஞ்சா விற்பனையில் தொடர் புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    Next Story
    ×