பேக்கரியில் திருடிய சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
- கண்காணிப்பி கேமராவில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர், வடுகன் தாங்கல் ஆகிய பகுதிகளில் காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பேக் கரி கடையில் கடையின் பூட்டை உடைத்து கடந்த மாதம் 25-ந் தேதி 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் உள்ளிட்டவை திருடுபோனது.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து திருட்டு தொடர்பாக கடைகளில் உள்ள சிசி டிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், வடுகன் தாங்கல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28) உள்பட வேலூரை சேர்ந்த 2 சிறுவர்கள் கடை யில் திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நேற்று மணிகண்டன் உள் ளிட்ட 3 பேரை போலீ சார் கைது செய்தனர்.
மணிகண்டனை வேலூர் சிறையிலும், சிறுவர்களை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.