உள்ளூர் செய்திகள்
பட்டப் பகலில் தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பேர் கைது
- கத்தியை காட்டி மிரட்டினர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டை திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). மாட்டு வண்டி தொழிலாளி. இவர் நேற்று காலை 11 மணிக்கு கோட்டை பின்புறம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரை வழிமடக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்து சென்றனர்.
இது குறித்து சரவணன் வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஷியாமலா இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் வழிப்பறியில் ஈடுபட்டது சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (19) கோட்டை பின்புறம் உள்ள நவநீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசன் (34) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.