உள்ளூர் செய்திகள்

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-04-18 14:52 IST   |   Update On 2023-04-18 14:52:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
  • கலெக்டர் உத்தரவு

வேலூர்:

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே சாராயம் விற்பதாக ஆந்திர மாநிலம் வி கோட்டா மண்டலம் பாம்பு களிப்பள்ளியை சேர்ந்த பூபேஷ் (வயது 25 (தாமோதரன் வயது 30 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார்.

கலெக்டர் உத்தரவின்பேரில் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை போலீசார் வேலூர் சிறையில் உள்ள பூபேஷ் தாமோதரன் ஆகியோரிடம் வழங்கினர்.

Tags:    

Similar News