உள்ளூர் செய்திகள்

ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் உள்பட 17 பேர் கைது

Published On 2023-08-19 08:16 GMT   |   Update On 2023-08-19 08:16 GMT
  • தமிழக - ஆந்திரா எல்லையோரம் சூதாட்டம்
  • ரூ.52 லட்சம் பறிமுதல்

குடியாத்தம்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை ஒட்டியபடி உள்ள வனப்பகுதிகள், தோப்புகளில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து சிலர் சூதாட்டம் நடத்துவதாகவும்,

இதில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டி விளையாடுவ தாகவும் தொடர்ந்து புகார் கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் குடியாத் தம் அருகே உள்ள தமிழக-ஆந் திர மாநில எல்லையோர முள்ள சைனகுண்டா கிரா மம் அருகே ஒரு மாந்தோப் பில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண் ணன் உத்தரவின் பேரில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்து சாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், வேலூர் உதவி போலீஸ் சூப் பிரண்டு (பயிற்சி) பிரசன்னகு மார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் பைக்கில் மாந்தோப்புக்குள் நேற்று மாலை திடீரென சென்றனர்.

அப்போது அங்கு சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் 20-க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாயுடன் வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

17 பேரை போலீசார் பிடித்த னர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் கள், 15 செல்போன்கள், 500 ரூபாய் கட்டுக்களுடன் 2 பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பணத்தை குடியாத் தம் தாலுகா போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு வந்து நகைக்கடையில் இருந்து பணம் எண்ணும் எந்திரம் எடுத்து வந்து எண்ணப்பட் டது. அப்போது அதில் ரூ.52 லட்சத்து 41 ஆயிரத்து 500 இருந்தது.

மேலும் இது சம்பந்தமாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகி யோர் வழக்குப் பதிவு செய்து சூதாடிய குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்ற பிரபாகரன் (வயது 36), கிருஷ்ணகிரியை சேர்ந்த சீனி வாசன், ஆற்காடு பாரதி, சென்னையை சேர்ந்த பாஸ்கர், சேட்டு, திருப்பத்தூரை சேர்ந்த வெற்றிவேல், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த கார்த்தி, உபேந்திரன், பெங்களூருவை சேர்ந்தரவிக்குமார், ராஜி, முனிராஜ், ஸ்ரீதர்குமார், ஜிதேந்திர குமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய் தனர்.

ஒரே இடத்தில் 52 லட்ச ரூபாய் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப் பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெறாத சம்பவம் ஆகும்.

குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் மலைகள் மற்றும் வனப்பகுதிகள் அதிகம் இருப்பதால் அங்கு சூதாட்டம் நடைபெறு வதாகவும், காவல்து றையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News