உள்ளூர் செய்திகள்

பக்தர்களிடம் 13 பவுன் நகை, பணம் திருட்டு

Published On 2023-08-19 08:19 GMT   |   Update On 2023-08-19 08:19 GMT
  • வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் துணிகரம்
  • கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணை

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா மற்றும் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.

தெப்பல் உற்சவம் நடந்தது. இதி ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 36), திவ்யஸ்ரீ (28) தம்பதி குடும்பத்தினருடன் எல்லையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய நேற்று மதியம் வந்தனர்.

தொடர்ந்து மூலவரை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து போது திவ்யஸ்ரீயின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கோவில் வளாகத்தில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். இருப்பினும் நகை திருடியவர் யார் என கண்டுபிடிக்க முடிய வில்லை.

இதேபோல் மற்றொரு பெண்ணிடம் 3 பவுன் நகையும், மூதாட்டியிடம் பணப்பையையும் திருடி சென்றுள்ளனர்.

இந்த தொடர் கொள்ளை சம்பவங்களால் கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News