உள்ளூர் செய்திகள்

சிறப்பு ரெயில் சேவை குறித்து அதிகாரிகள் பேட்டி அளித்த காட்சி.

காட்பாடியில் இருந்து 12 நாட்கள் ஆன்மீக சுற்றுலா

Published On 2023-06-20 08:04 GMT   |   Update On 2023-06-20 08:04 GMT
  • ரெயில் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டம்
  • அதிகாரிகள் தகவல்

வேலூர்:

காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் சேவை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெயில்வே தென் மண்டல பொது மேலாளர் ரவிக்குமார் மற்றும் சென்னை மண்டல துணை மேலாளர் மாலதி ஆகியோர் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியன் ெரயில்வே சுற்றுலா பிரிவில், பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை புதியதாக அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 சிலிப்பர் பெட்டிகள், 1 பேண்ட்ரி கார், 2 பவர் கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் இந்த ரெயிலில் உள்ளது.

பாரத் கவுரவ் சுற்றுலா பிரிவு தென் மண்டலம் சார்பில், வருகிற ஜூலை மாதம் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் திட்டம் அறிமுகப்படுத்த பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 1-ந் தேதி, இந்த சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 11 இரவுகள் மற்றும் 12 பகல்கள் அடங்கிய இந்த ஆன்மீக சுற்றுலா ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவ தேவி (கட்ரா) அமிர்தசரஸ், புது டெல்லி ஆகிய இடங்கள் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரெயில் கொச்சு வேலி, நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் வழித்தடத்தில் செல்லும்.

இந்த ஆன்மீக சுற்றுலாவை கான ஒருவருக்கு சிலிப்பர் பெட்டிக்கு ரூ. 22 ஆயிரத்து 35-ம், குளிர் சாதன வசதி பெட்டிக்கு ரூ.40 ஆயிரத்து 380 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் இடங்களை பார்வையிடுவதற்கு போக்குவரத்து மற்றும் ரெயில் பயணத்தின் போது தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர் என சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பயணக் காப்புறுதி திட்டமும் வழங்கப்பட உள்ளது.

இதில் மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால், எல்.டி.சி. சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News