உள்ளூர் செய்திகள்

குப்பைகளை அகற்றிய நகரமன்ற தலைவர்

Published On 2023-06-04 13:53 IST   |   Update On 2023-06-04 13:53:00 IST
  • ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என எச்சரிக்கை
  • தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றினார்கள்

குடியாத்தம்:

குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படுவதே இல்லை.

இது குறித்து நகராட்சி சுகாதார பிரிவில் தகவல் தெரிவித்தாலும் குப்பைகளை உடனடியாக அகற்றுவது இல்லை என கூறப்படுகிறது.

தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தர்ராஜன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் ம.மனோஜ், சி.என்.பாபு, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திடீரென குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது பல இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்ப டாமல் தேங்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து நகராட்சி துப்புரவுபிரிவு அதிகாரிகளை அப்பகுதிக்கு அழைத்த நகரமன்ற தலைவர் சவுந்தர்ராஜன் உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் எனக்கூறி அங்கேயே நின்று கொண்டார்.

இதனை தொடர்ந்து உடனடியாக தூய்மை பணியாளர்கள் தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்றினார்கள்.

அப்போது அவர்களிடம் பேசிய நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன் குப்பைகளை தினம்தோறும் அகற்றவேண்டும் பல இடங்களில் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதே நிலை நீடித்தால் துப்புரவு பிரிவில் உள்ள மேற்பார்வை யாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News