உள்ளூர் செய்திகள்

மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு வல்லவ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் உள்ளார்.

வல்லவ விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம்

Published On 2022-07-09 09:06 GMT   |   Update On 2022-07-09 09:06 GMT
  • வல்லவ விநாயகர் கோவில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
  • மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் நாக தேவதைகளுக்கு உள்பட சாமிகளுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வல்லவ விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது.

மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் வல்லப விநாயகர், பானலிங்க விஸ்வேஸ்வரர் சமேத விசாலட்சி அம்மன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர், ஸ்ரீ மகா காலபைரவர், நவகிரகங்கள் மற்றும் நாக தேவதைகளுக்கு பால் தயிர் பன்னீர் இளநீர் சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் தேன் விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை வல்லப விநாயகர் கோவில் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News