உள்ளூர் செய்திகள்

தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்

Published On 2022-11-01 09:22 GMT   |   Update On 2022-11-01 09:22 GMT
  • பேராவூரணி பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்.
  • பல குடும்பங்கள் கால்நடைகளை இழந்து வருமானமின்றி தவித்து வந்தனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சென்ற ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் பேராவூரணி பகுதியில் பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கி கால்நடைகள் திடீரென இறந்து விட்டது.

இதனால் பல குடும்பங்கள் கால்நடைகளை இழந்து வருமானமின்றி தவித்து வந்தனர். இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் உள்ள கால் நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News