உள்ளூர் செய்திகள்

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள5,369 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2023-03-22 15:26 IST   |   Update On 2023-03-22 15:26:00 IST
  • அரசு துறையில் காலியாக உள்ள குரூப்- பி, குரூப்-சி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமிக்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதுகின்றனர்.

சேலம்:

இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறையில் காலியாக உள்ள குரூப்- பி, குரூப்-சி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமிக்கிறது.

சேலம் மாவட்டம்

ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலைத் தேர்வு- 2022 தாள்-1 தேர்வு நடத்தி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் காகாபாளையம், சிவதாபுரம் ஆகிய 2 தேர்வு மையங்களில் இந்த நடந்து வருகிறது. இந்த தேர்வில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

இதன் தொடர்சியாக மீண்டும் அடுத்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,369 குரூப்-பி, மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதில் இடம் பெற்றுள்ளது. கல்வி தகுதி 10-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-1, பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்திய அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும். வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரப்பில் தளர்வு அளிக்கப்படும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Tags:    

Similar News