என் மலர்
நீங்கள் தேடியது "Central Govt Department Vacancy"
- அரசு துறையில் காலியாக உள்ள குரூப்- பி, குரூப்-சி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமிக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதுகின்றனர்.
சேலம்:
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம், அரசு துறையில் காலியாக உள்ள குரூப்- பி, குரூப்-சி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமிக்கிறது.
சேலம் மாவட்டம்
ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வுகளை சேலம் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதுகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலைத் தேர்வு- 2022 தாள்-1 தேர்வு நடத்தி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் காகாபாளையம், சிவதாபுரம் ஆகிய 2 தேர்வு மையங்களில் இந்த நடந்து வருகிறது. இந்த தேர்வில் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.
இதன் தொடர்சியாக மீண்டும் அடுத்த அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,369 குரூப்-பி, மற்றும் சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அதில் இடம் பெற்றுள்ளது. கல்வி தகுதி 10-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-1, பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்திய அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 27-ந்தேதி ஆகும். வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரப்பில் தளர்வு அளிக்கப்படும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.






