உள்ளூர் செய்திகள்

இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.பி. அப்துர்ரஹ்மான் பேசினார்.

தஞ்சையில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி ஆலோசனை கூட்டம்

Published On 2023-01-16 08:58 GMT   |   Update On 2023-01-16 08:58 GMT
  • இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக்கின் 75- வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம் சென்னையில் மாநாடு நடந்தது.
  • தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது.

வல்லம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75- வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம் சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாஸ் மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில முதன்மை தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய்னுலாபுதீன் ,மாநகர செயலாளர் ஜெ.சரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை தலைவர் ரபீக் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், மாநில முதன்மை தலைவர் அப்துர்ரஹ்மான் பேசியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. பள்ளிவாசல்களில் மேம்பாட்டிற்காக 10 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உள்ளார்.

அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சமூக நல்லிணக்கத்தை பேணி காத்து வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75 -வதுஆண்டு பவள விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம்சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இருந்து அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில செயலாளர் ஷாஜகான், தொழிலதிபர் மஹாராஜா சில்க்ஸ் முகம்மது ரபீக், தஞ்சை டவுன் காஜி , பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், இமாம்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பஷிர் அகமது, நிர்வாகிகள் ஜானகி ராமன், ரமேஷ், வல்லம் நகர செயலாளர் முகம்மது இஸ்மாயில் மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பகுதி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை மாநகர செயலாளரும், தஞ்சை மாநகராட்சி 47 -வது வார்டு கவுன்சிலருமான ஜெ.சரீப் நன்றி கூறினார்.

Tags:    

Similar News