உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி அடையாளம் தெரியாத ஆண் பலி

Published On 2022-12-27 09:00 GMT   |   Update On 2022-12-27 09:00 GMT
  • டெக்ஸ்டூல் பாலம் அருகே 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார்.
  • ரெயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை.

கோவை,

வடகோவை-பீளமேடு ரெயில்வே தண்டவாளம் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். பின்னர் போலீசார் ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ரெயில் மோதி இறந்து கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ெரயில் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.

Tags:    

Similar News