உள்ளூர் செய்திகள்

பிணத்தை மீட்ட போலீசார்.

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Published On 2022-09-10 09:03 GMT   |   Update On 2022-09-10 09:03 GMT
  • தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது.
  • அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சேலம்:

சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று அடையாளம் தெரியாத 60 வயது மதிக்க ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி டவுண் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அந்த பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு நின்ற பொதுமக்கள் யாரும் பிணத்தை தூக்க முன்வராததால் மற்ற போலீசார் முன்னிலையில் டவுன் போலீஸ் நிலைய ரோந்து வாகன டிரைவர் ஏட்டு பாரதி தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினார்.பின்பு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. யாரும் முன்வராத நிலையில் போலீசாரே பிணத்தை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றியதை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர். 

Tags:    

Similar News