உள்ளூர் செய்திகள்

நீரொழுங்கி கட்டுமான பணிகளை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்தார்.

நீரொழுங்கி கட்டுமான பணி - கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Published On 2022-06-23 10:05 GMT   |   Update On 2022-06-23 10:05 GMT
  • வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப்பணியை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
  • அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலக பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் காவிரி உப கோட்ட சீர்காழி நீர்வளத் துறையின் மூலம் நடைபெறும் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொ ழுங்கி கட்டுமானப்பணி, தென்னாம்பட்டினம் கிராமம் நாட்டு கண்ணி மண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையார் காலமாநல்லூர் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அனைத்துப் பணிகளையும் விரை வாக முடிக்குமாறுபொதுப்ப ணித்துறை அலுவலக பொறியாள ர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செய ற்பொறியாளர் பாண்டியன் சீர்காழி உப கோட்ட உதவி பொறியாளர்கள் சரவணன், வெங்கடேசன் ,உதவி பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News