இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
- ராஜலட்சுமி தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
- விபத்தில் துகிலியை சேர்ந்த ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீடாமங்கலம்:
மயிலாடுதுறை அடுத்த கோமல் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி.
இவர், தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் திருவிசநல்லூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு தீபாவளியை முன்னிட்டு சென்றுள்ளார்.
பண்டிகை கொண்டா ட்டம் முடிந்தவுடன் இரவு ஊருக்கு செல்லலாம் என ராஜலட்சுமி தனது மகளுடன் கிளம்பி தனது இருசக்கர வாகனத்தில் வேப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரா தவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் துகிலியை சேர்ந்த ராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.