உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

Published On 2023-07-27 14:50 IST   |   Update On 2023-07-27 14:50:00 IST
  • போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.
  • இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடு போனது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக, சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே தொப்பையாறு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் ஓசூர் தேர்பேட்டை பகுதியை சேர்ந்த குப்புசாமி (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News