உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய பயணச்சீட்டு எந்திரம்.

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெற 2 புதிய எந்திரங்கள்

Published On 2023-03-19 13:09 IST   |   Update On 2023-03-19 13:09:00 IST
  • பயணிகள் ஏ.டி.வி.எம் எந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி பணத்தை செலுத்தி பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • மற்றொரு எந்திரமும் விரைவில் செயல்பட தொடங்கும் என்று தெரிவித்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் வசதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.டி.வி.எம் எந்திரங்களில் ரெயில்வே நிர்வாகம் அனுமதித்த முகவர்களிடம் பணம் செலுத்தி பயணிகள் பயணச்சீட்டு பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் 2 புதிய பயணச்சீட்டு பெறும் எந்திரங்கள் ரெயில்வே நிர்வாகம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே அலுவலர்கள் கூறியதாவது,

முகவரிடம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதற்கு கூடுதலாக 2 ஏ.டி.வி.எம் எந்திரங்கள் நிறுவப்பட்டன. யூ.டி.எஸ் என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்த பயணிகள் ஏ.டி.வி.எம் எந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை பயன்படுத்தி பணத்தை செலுத்தி பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் 2 புதிய ஏ.டி.வி.எம். எந்திரங்களில் ஒரு எந்திரம் கடந்த 2 நாட்களாக செயல்பாட்டில் உள்ளது. மற்றொரு எந்திரமும் விரைவில் செயல்பட தொடங்கும் என்று தெரிவித்தனர். இதேபோல பழனி ரெயில்நிலையத்திலும் 2 பயணச்சீட்டு பெறும் புதிய எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News