அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.1 கோடி திருட்டு- 2 பேர் கைது
- அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- கைதான 2 பேரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பிரபல தனியார் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து திடீரென ரூ.1.10 கோடி மாயமானது.
மர்ம நபர் ஆன்-லைன் மூலம் நூதன முறையில் பணத்தை திருடி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் ஆன்-லைன் மூலம் நூதன முறையில் தனியார் நிறுவனத்தின் பணத்தை திருடியது கொல்கத்தாவைச் சேர்ந்த சபீர் அலி, கிருஷ்ணகுமார் பிரதாப் என்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான 2 பேரிடம் இருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நூதன திருட்டுக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்றும் விசாரணை நடக்கிறது.