உள்ளூர் செய்திகள்

சாராயம் விற்ற இருவர் கைது

Published On 2022-11-11 08:18 GMT   |   Update On 2022-11-11 08:18 GMT
  • கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் பறிமுதல்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூர் கிராமத்தில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேவூர் அரசினர் விடுதி அருகே சாராயம் விற்ற நாகை, செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த முருகன் (வயது50), இரிஞ்சூர் கிராமம் மாரியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஜெகன்னாத் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News