உள்ளூர் செய்திகள்

கவிழ்ந்து கிடக்கும் லாரியை படத்தில் காணலாம்.

ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: மருத்துவமனையில் 7 பேருக்கு சிகிச்சை

Published On 2022-06-15 14:30 IST   |   Update On 2022-06-15 14:30:00 IST
  • 30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
  • லாரியில் இருந்த 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே ஏக்கல்நத்தம் மலைகிராமம் உள்ளது. மலைமேல் வசிக்கும் மல்லப்பா என்பவர் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டிற்கு கான்கிரீட் போடுவதற்காக கிருஷ்ணகிரி பெத்ததா ளாப்பள்ளி பகுதியிலிருந்து லாரியில் கான்கிரீட் கலவை கலக்கும் எந்திரத்துடன் அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (வயது 23), இந்திராணி (45), ஜோதி (30), லோகநாதன் (23), கோபி (40), ஐ.பி.கானப்பள்ளி சென்னப்பன் (29) ஆகியோர் சென்றனர்.

லாரியை பெத்தா ளாப்பள்ளியை சேர்ந்த அஜித்குமார் (23) ஓட்டி னார். ஏக்கல்நத்தம் மலைப்பாதையில் எந்திரத்துடன் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்று சாலையோரம் உள்ள 30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரியில் இருந்த, 7 பேரும் படுகாயமடைந்த நிலையில் அவர்களது சத்தத்தை கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News