உள்ளூர் செய்திகள்

அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை படத்தில் காணலாம்.

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: முதியவர் சாவு

Published On 2023-06-06 08:49 GMT   |   Update On 2023-06-06 08:49 GMT
  • சரக்கு வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
  • அங்கு சிகிச்சை பலனின்றி தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள குமாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜய். இவரது மனைவி செர்ணமுகி. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் தான் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் திருமண விருந்து நிகழ்ச்சிக்காக குமாரம்பட்டி கிராமத்திலிருந்து மாப்பிள்ளை அஜய் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது மாமனார் வேட்ரப்பட்டிக்கு வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்த சரக்கு வாகனத்தில் சுமார் குழந்தை உள்பட 28 பேர் பயணம் செய்தனர்.

அப்போது அரூர்-திருப்பத்தூர் சாலை கூத்தாடிப்பட்டி பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக படுகாயம் அடைந்த தர்மன் (வயது65) உள்பட 4 பேர் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News