உள்ளூர் செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2023-04-03 15:28 IST   |   Update On 2023-04-03 15:28:00 IST
  • கட்டுபாட்டை இழந்து லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
  • அதிர்ஷ்ட வசமாக ஓட்டுனர் செந்தில் உயிர்த்தப்பினார்.

மத்தூர்,

வேலூரில் இருந்து லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேலூரை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டினார்.

அப்போது நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காட்டேரி கிராமம் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் அதிர்ஷ்ட வசமாக ஓட்டுனர் செந்தில் உயிர்த்தப்பினார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News