உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்த இளம் ெபண் மாயம்

Published On 2023-02-03 09:32 GMT   |   Update On 2023-02-03 09:32 GMT
  • வீட்டில் இருந்த இளம் பெண் மாயமானார்
  • கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

திருச்சி :

திருச்சி இனாம்குளத்தூர் இமாம் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை காணவில்லை. இனாம் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் நசீர். இவரது மகள் நிஷாந்த் பர்வீன் (வயது 19). இவர் நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று வீட்டிலிருந்தே திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிப் பார்த்தனர்.

ஆனால் எந்த தகவலும் கிடை க்கவில்லை இதைத்தொ டர்ந்து பிரேம் நசீர் இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகளை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News