உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி வன்னியர் சங்க நிர்வாகி பலி

Published On 2023-09-19 13:39 IST   |   Update On 2023-09-19 13:39:00 IST
  • திருச்சியில் மின்சாரம் தாக்கி வன்னியர் சங்க நிர்வாகி பலியானார்
  • உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி, 

திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44) முன்னாள் பாமக நிர்வாகியான இவர் தற்போது வன்னியர் சங்க உறையூர் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார்.கார்பெண்டர் வேலை செய்து வந்த குமார் மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் மாடி படிக்கட்டில் ஏறினார். அப்போது நிலை தடுமாறிய அவர் படிக்கட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு கைப்பிடியை பிடித்துள்ளார்.இதில் ஏற்கனவே மழையின் காரணமாக அந்த கைப்பிடியில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாமல் கைப்பிடியை பிடித்தவரால் அதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.வெகு நேரமாக கம்பியை பிடித்தபடியே குமார் நின்றதைப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் அவரை காப்பாத்த முயன்றா ர். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது.பின்னர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News