உள்ளூர் செய்திகள்

சிக்கிம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு புள்ளம்பாடியில் அஞ்சலி

Published On 2022-12-27 15:20 IST   |   Update On 2022-12-27 15:20:00 IST
  • சிக்கிம் மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
  • நிகழ்ச்சியானது புள்ளம்பாடி முன்னாள் படை வீரர் நல சங்கத் தலைவர் அமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.

டால்மியாபுரம்:

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா சிலை அருகில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடக்கு சிக்கிம் மாநிலத்தில் பயணத்தின் பொழுது உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சியானது புள்ளம்பாடி முன்னாள் படை வீரர் நல சங்கத் தலைவர் அமலதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் மார்ட்டின் ஜோசப் மற்றும் முன்னாள் படை வீரர் நல சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News