உள்ளூர் செய்திகள்

துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டிபன் கடை எரிந்து நாசம்

Published On 2023-06-09 06:42 GMT   |   Update On 2023-06-09 06:42 GMT
  • துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே டிபன் கடை எரிந்து நாசமானது
  • சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடவாள பொருட்களும் எரிந்து சாம்பலானது.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). இவர் துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சின்ன ஏரிக்கரையில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சரவணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவு கடையின் உள்ளே புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் சண்முகப்ரியன், பழனிச்சாமி, வினோத், சஷிர் உள்ளிட்டோர் அடங்கிய தீயணைப்பு குழுவினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையின் மேற்கூரை மற்றும் கடையின் உள்ளே இருந்த சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடவாள பொருட்களும் எரிந்து சாம்பலானது.

Tags:    

Similar News