உள்ளூர் செய்திகள்

வாலிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது

Published On 2022-07-27 10:17 GMT   |   Update On 2022-07-27 10:21 GMT
  • வாலிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி:

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது24). இவர் திருச்சியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள கிராப்பட்டி என்ற இடத்தில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முத்து, காவலர் பயிற்சி பட்டாலியன் -1 அமைந்துள்ள கிராப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கருமண்டபம் பகுதியை சேர்ந்த பாபு, புதுக்கோட்டை மணல்மேல் குடி பகுதியை சேர்ந்த தாமோதரன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டி அவரை கல்லால் அடித்து அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இந்நிலையில் முத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுக்குறித்து அவர் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள பாபு மீது 24 வழக்குகளும், தாமோதரன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News