உள்ளூர் செய்திகள்
- பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
- ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி- மதுரை ரோடு குப்பான்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவரது மனைவி கௌசல்யா ( 23). இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே உள்ள பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது ரமேஷ் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினார்.இதில் ரமேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.