திருச்சியில் ஆசிரியர் கடத்தலா ? போலீசார் விசாரணை
- துறையூர் கொட்ட பாளையம் விஸ்வாம்பல் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 42 )
- தியாகராஜன் டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
திருச்சி :
துறையூர் கொட்ட பாளையம் விஸ்வாம்பல் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(வயது 42 )இவர் டாப் செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற ஆசிரியர் தியாகராஜன் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரது மனைவி ராதிகா கணவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.அதைத்தொடர்ந்து ராதிகா உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது கணவரை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மாயமான ஆசிரியர் தியாகராஜனை தேடி வருகிறார்.
மாயமான ஆசிரியர் தியாகராஜனை மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.