உள்ளூர் செய்திகள்

ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நவீன கோளரங்கம்

Published On 2023-08-15 13:41 IST   |   Update On 2023-08-15 13:41:00 IST
  • திருச்சியில் 4 ேக தொழில்நுட்பத்தில் ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நவீன கோளரங்கம் திறக்கப்பட்டது
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்த வைத்தார்

திருச்சி,

திருச்சி விமானம் அருகே அண்ணா அறிவியல் மைய் (கோளரங்கம்) இயங்கி வருகிது. இங்கு வானியல் குறித்த நேரடி காட்சிகளை காணலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த அண்ணா அறிவியல் மையம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு இந்த கோளரங்கத்தை மேம்படுத்த தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியது. இதன்படி அறிவியல் மையத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் முழு கோள எண்ணிலக்க கோளரங்கம் மேம்படுத்தும் பணி நடந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் நவீன எண்ணிலக்க கோளரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சிமூலம் திறந்து வைத்தார். தையொட்டி கோளரங்கத்தில் நடந்த விழாவில் கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன், துணை இயக்குனர் வள்ளி உள்ளிட்ட அறிவிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News