search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Planetarium"

    • திருச்சியில் 4 ேக தொழில்நுட்பத்தில் ரூ.3 கோடியில் புதுப்பிக்கப்பட்ட நவீன கோளரங்கம் திறக்கப்பட்டது
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்த வைத்தார்

    திருச்சி,

    திருச்சி விமானம் அருகே அண்ணா அறிவியல் மைய் (கோளரங்கம்) இயங்கி வருகிது. இங்கு வானியல் குறித்த நேரடி காட்சிகளை காணலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த அண்ணா அறிவியல் மையம் பெரும் உதவியாக இருந்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு இந்த கோளரங்கத்தை மேம்படுத்த தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியது. இதன்படி அறிவியல் மையத்தில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் முழு கோள எண்ணிலக்க கோளரங்கம் மேம்படுத்தும் பணி நடந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில் நவீன எண்ணிலக்க கோளரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சிமூலம் திறந்து வைத்தார். தையொட்டி கோளரங்கத்தில் நடந்த விழாவில் கோளரங்க திட்ட இயக்குனர் அகிலன், துணை இயக்குனர் வள்ளி உள்ளிட்ட அறிவிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.
    • இருக்கைகள் போடப்பட்டு சாய்ந்த நிலையில் மேற்கூறையில் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் கோளரங்கங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தஞ்சை, சேலம் உள்ளிட்ட மேலும் 6 இடங்களில் புதிய நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் தஞ்சை மாநகரமும் ஒன்று. இதில் சேலத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டு கோளரங்கம் திறக்கப்ப ட்டு விட்டன. திருநெல்வே லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஈரோட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் தருவாயில் உள்ளது.

    தஞ்சை ,திருச்சி, தூத்து க்குடி ஆகிய இடங்களில் பணிகள் நடந்து வருகிறது.

    தஞ்சையில் அருளா னந்தா நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ள இடத்தில் 70 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் நவீன கோளரங்கம் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    இந்த நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் மூன்று பிரிவுகளை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 71 லட்சம் செலவில் இது அமைக்கப்படுகிறது.

    இதில் முதல் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் ,ஆண், பெண்களுக்கு தனித்தனியாக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன. 2-வது பகுதியில் காட்சி கூடம், உள்ளரங்க அறிவியல் சாதனை மையம், கேண்டின் ஆகியவைகளை கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதில் இருக்கைகள் போடப்பட்டு சாய்ந்த நிலையில் மேற்கூறையில் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. அறிவியல் சார்ந்த காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெறுகின்றன. 3-வதாக உள்ள பகுதியில் வெளியரங்க அறிவியல் மையம் அமைக்கப்படுகிறது. இதில் தற்போது 30 அடி உயரம் மற்றும் 20 அடி உயரத்தில் இரண்டு ராக்கெட்டுகள் நிறுவப்பட உள்ளன. மேலும் அரிய வகை விலங்குகள் மற்றும் அதன் தன்மைகள் ,உணவு வகைகள் அதன் ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் இடம் பெறும் வகையில் தகவல் பலகைகளும் இடம் பெறுகின்றன.

    இதில் யானை, டைனோசர் ,ஆமை, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்குகள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகிறது. மேலும் குடிநீர், மின்விளக்கு வசதிகளும் செய்யப்படுகின்றன. சிறுவர்- சிறுமிகளுக்கான விளையாட்டு சாதன ங்களும் உள்ளது.

    மேலும் பல இடங்களில் அமரும் வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. தற்போது பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நவீன கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் தஞ்சையில் அமைவதால் அது தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

    ×