உள்ளூர் செய்திகள்

மனைவி , 2-வது கணவருக்கு சரமாரி கத்திக்குத்து

Published On 2023-10-12 07:55 GMT   |   Update On 2023-10-12 07:55 GMT
  • திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மனைவி, ௨வது கணவருக்கு சரமாரி கத்தி குத்து விழுந்தது
  • கருத்து வேறுபாட்டினால் பிரிந்த முதல் கணவர் ஆத்திரத்தில் வெறிச்செயல்

திருச்சி,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் முகமது கனி (வயது 49), மீன் வியாபாரி. இவரது மனைவி சர்மிளா பானு ( 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் கடந்த 4 வருட காலமாக பிரிந்து வாழ்கின்றனர்.

முகமது கனி செங்கிப்பட்டியில் வசித்து வருகிறார். ஷர்மிளா பானு திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஜான் பாஷா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு வசித்துவருகிறார்.

இந்த நிலையில் முகமது கனி தனது முதல் மனைவி ஷர்மிளா பானுவை பார்க்க போதையில் சுப்பிரமணியபுரம் வந்துள்ளார். அப்போது ஷர்மிளா பானு தனது 2+வது ஜான் பாஷாவுடன் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற முகமது கனி அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியால் ஜான் பாஷா மற்றும் ஷர்மிளா பானுவையும் கத்தியால் குத்தினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

முகமது கனிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கேகே நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட 3 பேரையும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News