கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவருக்கு அரிவாள் வெட்டு
- திருச்சியில் கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவர், மைத்துனருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது
- கள்ளக்காதலன் வெறிச்செயல்
திருச்சி,
திருச்சி கிராப்பட்டி மதுரை ரோடு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34). இவர் அப்பகுதியில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரீத்தா வுக்கும் எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ். காலனி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த வெங்கட் (33) என்பவருக்கிடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு அவரது மைத்துனரான, மற்றொரு திருநாவுக்கரசு (வயது 29)ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட் வீட்டுக்கு சென்று அவரிடம் சத்தம் போட்டு உள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த வெங்கட் திடீரென்று அரிவாளை எடுத்து 2 பேரையும் வெட்டினார். இந்த சம்பவத்தில் காயம டைந்த 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருநா வுக்கரசு எடமலைப்பட்டிப் புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.