உள்ளூர் செய்திகள்
- திருச்சியில் கைதி உயிரிழந்தார்
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்
திருச்சி:
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 68). இவர் நடு காவேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதை தொடர்ந்து அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முகசுந்தரம் கேகே நகர் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.