உள்ளூர் செய்திகள்

திருச்சியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-11-21 07:00 GMT   |   Update On 2023-11-21 07:00 GMT
  • திருச்சி கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
  • செயற்பொறியாளர் அறிவிப்பு

திருச்சி,

திருச்சி மன்னார்புரம் பெருநகர் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(22-ந்தேதி)புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒருபகுதி, சிம்கோ காலனி, ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ்ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஜே.கே.நகர், சந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என்.அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News