- கே.கே. நகரில் பெண் போலீசின் கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி கே. சாத்தனூர்பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 32) இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தை உள்ளது. இதில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு ஆண் குழந்தை திடீரென்று இறந்து விட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவக்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது உடல் நலனும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி சிவகுமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து கே.கே. நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.