உள்ளூர் செய்திகள்

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தே.மு.தி.க.வினர் தங்கத்தேர் இழுத்தனர்

Published On 2023-08-26 14:03 IST   |   Update On 2023-08-26 14:03:00 IST
  • திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிகவினர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்தனர்
  • மாவட்டச் செயலாளர் டி.வி. கணேஷ் தலைமையில் நடந்தது

திருச்சி,

திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிகவினர் விஜயகாந்த் பிறந்த நாளை கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி. கணேஷ் தலைமை தாங்கினார்.மலைக்கோட்டை, பாலக்கரை, பொன்மலை பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.பின்னர் மன்னார்புரம் விழிஇழந்தோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.அதன் பின்னர் மாலையில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கலைப்புலி கே. பாண்டியன், ராமு, பொதுக்குழு உறுப்பினர் விஜய் சுரேஷ், ஜெயராமன்,பகுதி செயலாளர் என் எஸ் எம் மணிகண்டன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், மகாமுனி, பிரீத்தா விஜய் ஆனந்த், பெருமாள், சங்கர்உறையூர் பகுதி செயலாளர் மோகன், அவைத்தலைவர் நவ்ஷாத் ,பொருளாளர் பெரிய மருது, துணை செயலாளர் பரதன் குமார் வட்டச் செயலாளர் வல்லரசு பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News