உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகேரூ.16 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

Published On 2023-10-15 08:53 GMT   |   Update On 2023-10-15 08:53 GMT
  • போலீசார் வாகன சோதனை செய்தனர்.
  • ரூ.16 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்


திருச்சி,அக்.15-


திருச்சியை அடுத்த மணிகண்டம் பகுதியில் அளுந்தூர் மாரியம்மன் கோவில் அருகில் மணிகண்டம் போலீசார் வாகன சோதனை செய்தனர்.


அப்போது சிவகாசியில் இருந்து 3 லாரிகள் வந்தது.அதனை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினார்கள். சோதனையில் 3 லாரிகளின் உள்ளே பார்த்த போது, அதில் எளிதில் தீப்பற்ற கூடிய வெடிப்பொருட்களை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டம் போலீசார் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 3 லாரி மற்றும் அதிலிருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர்கள் 3 பேரை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் பிடிப்பட்ட லாரிகளில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள பண்டல் பண்டலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags:    

Similar News