உள்ளூர் செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை

Published On 2023-10-11 12:42 IST   |   Update On 2023-10-11 12:42:00 IST
  • மணப்பாறையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கணவர் தற்கொலை
  • மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்

திருச்சி,

திருச்சி மணப்பாறை அருகே உள்ள மலையாடிப்ப ட்டி ராயம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ சேகர். இவரது மனைவி ஹஸ்பர் மேரி. கணவன்- மனைவி இருவரும் இணை பிரியாத ஜோடியாக வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கஷ்ப்பர் மேரி உடல் நலக்கு றைவால் திடீரென இறந்து விட்டார். இது ஸ்டீபன் ராஜ சேகருக்கு மிகுந்த மனவே தனையை ஏற்படுத்தியது.மனைவியின் பிரிவு பிரிவு அவரை நிலைகுலைய செய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் உள்ள யாரிடமும் சரியாக பேசாமல் அமைதி யாக இருந்தார்.பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்டீபன் ராஜசேகர் திடீரென மனைவி சேலையில் தூக்கு மாட்டி தொங்கினார்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அவரை மீட்டு 108 ஆம்புல ன்ஸ் மூலமாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஸ்டீபன் ராஜ சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து அவரது தந்தை தாமஸ் பீட்டர் மணப்பாறை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News