உள்ளூர் செய்திகள்

கஞ்சா,லாட்டரி, சூதாட்டம் : திருச்சியில் 12 பேர் அதிரடி கைது

Published On 2023-10-16 08:01 GMT   |   Update On 2023-10-16 08:01 GMT
  • கஞ்சா,லாட்டரி, சூதாட்டம் :
  • திருச்சியில் 12 பேர் அதிரடி கைது


திருச்சி


திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.


இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சின்ன கொத்தமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


அதேபோல் கோட்டை, தில்லை நகர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக ஜெயக்குமார், அன்வர் பாஷா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் திருச்சி கண்டோன்மெண்ட், கே.கே.நகர்,தில்லை நகர் ஆகிய பகுதிகளில் சூதாட்டம் நடைபெற்ற இடங்களில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர். இந்த அதிரடி வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கேட்பாரற்று கடந்த 5 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.




Tags:    

Similar News