உள்ளூர் செய்திகள்

கடனை கட்ட முடியாததால் மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை திருச்சியில் பரிதாபம்

Published On 2023-10-07 14:32 IST   |   Update On 2023-10-07 15:00:00 IST
  • கடனை கட்ட முடியவில்லை
  • மதுவில் விஷம் கலந்து குடித்து வியாபாரி தற்கொலை
  • திருச்சியில் பரிதாபம்

திருச்சி,

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் கோபால கிருஷ்ணன் (வயது 40). இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

வியா பாரியான இவர் தனியார் வங்கி மற்றும் மகளிர் குழு மூலம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியு ள்ளார். வியாபாரத்தில் ந ஷ்டம் ஏற்பட்டதால், வா ங்கிய கடனை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த கோபாலகிருஷ்ணன் எலி மருந்து பவுடரை மதுவில் கலந்து குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கோபால கிருஷ்ணன் இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி செலின் பிரதீபா கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News