உள்ளூர் செய்திகள்

கோவில்களில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-11-26 07:00 GMT   |   Update On 2023-11-26 07:00 GMT
  • கார்த்திகை தீபத்திருநாள் சாமி தரிசனம் செய்ய கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
  • பரணி தீபம் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்

திருச்சி, 

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். இதேபோல கோவில்களிலும் தீப திருவிழா கொண்டாடப்படும். திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் நம்பெருமாள், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர், மலைக்கோட்டை தாயுமானவர், உறையூர் வெக்காளியம்மன், பஞ்சவர்ணேஸ்ரர்,  சமயபுரம் மாரியம்மன், திருபட்டூர் பிரம்மா, வயலூர் முருகன், குணசீலம் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கோயில்களில் ஏற்றப்பட்டிருக்கும் பரணி தீபத்தை பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News