உள்ளூர் செய்திகள்

கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்

Published On 2023-07-15 06:59 GMT   |   Update On 2023-07-15 06:59 GMT
  • திருச்சி மணப்பாறையில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது
  • புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம் மணப்பாறை நல்லாம்பிள்ளை கிராம நிர்வாக அலுவலராக கணபதி ராஜ் உள்ளார். இவரின் அலுவலகத்திற்கு வந்த வீ.பூசாரி பட்டியை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மகன் வீரசங்கர் என்பவர், பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து உள்ளார். முனியப்பன் இறந்து விட்டதாக கூறி, வாரிசு சான்றிதழ் கொடுத்து வீரசங்கரின் அண்ணன் விண்ணப்பித்து உள்ளது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கணபதி ராஜ் எடுத்து கூறி உள்ளார். இதனை ஏற்க மறுத்த வீரசங்கர், கிராம நிர்வாக அலுவலருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவர் கண்டிக்கவே வீரசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் கணபதிராஜ் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News