உள்ளூர் செய்திகள்
- கடையில் திருட முயன்ற சிறுவர்கள் போலீசில் சிக்கினர்.
- போலீசார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40) . இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அதிகாலை மீண்டும் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது இரண்டு சிறுவர்கள் கடையின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர்களை பிடித்து, அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரியமங்கலம் திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.