திருச்சி அரியமங்கலத்தில்வேன் உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்புபிரபல ரவுடி கைது
- வேன் உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு
- பிரபல ரவுடி கைது
- திருச்சி அரியமங்கலத்தில் சம்பவம்
திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை தீப்பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்தவர் தெய்வ மணிகண்டன் (வயது 41). இவர் சொந்தமாக டூரிஸ்ட் வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று அரியமங்கலம் வடக்கு உக்கடை பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர், அவரது சட்டை பையில் இருந்த 2500 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளார். இது குறித்து தெய்வ மணிகண்டன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்ற, கஞ்சா கணேசன் என்ற ரவுடியை கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிந்து, திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட கஞ்சா கணேசன் மீது அரியமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி ,செயின் பறிப்பு, கஞ்சா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.