ஸ்ரீரங்கத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை - ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கம் வரவேற்பு
- ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க துணைத் தலைவர் செல்வி குமரன் மற்றும் மக்கள் செய்தி தொடர்பாளர் ரொட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் ஆகியோர் தெரிவிக்கையில்,
பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரெங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் கங்கையை காட்டிலும் புனிதமாக கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கவேண்டும் என்பதுதான். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நீண்ட நாட்களாக ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தி வந்தோம். எங்களின் கோரிக்கைகளை நேற்று நடந்த திருச்சி மாநகராட்சியில் அவசர மற்றும் சாதாரண கூட்டத்தில், காங்கிரஸ் கவுன்சிலர் ஜவஹர் வலியுறுத்தி பேசியதற்கும், இதற்கு ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகேயுள்ள மாநகராட்சி கிளப் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கபட உள்ளது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்ட ப்பட உள்ளது என்று மேயர் தெரிவித்ததற்கும், இத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்கும், பாராட்டி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.